யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயாரைக் கைது செய்தனர்.
விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பெண்ணின் சகோதரனே குழந்தை அடித்து துன்புறுத்தப்படுவதை காணொலிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.